நில நூல்களை (Geography) மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்குக் கூடச் செடி கொடி வகைகளிலும், உயிர் வகைகளிலும் செழித்து, மனித நாகரிகப் பழைமை வகையிலும் மிகச் சிறந்து விளங்குவது நடுக்கோட்டுப் பகுதியே (Equatorial Regions) என்பது விளங்கும். இதுவே உயிர் வகைகள் பெருகுதற்கேற்ற தட்பவெப்ப நிலைகளைச் சிறப்பு வகையிற் பெற்றுள்ளது. இப்பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் செல்லச் செல்ல உயிர் வளர்ச்சிக்குப் பலவகைச் செயற்கைத் துணைகள் வேண்டியிருப்பது தெரியவரும். உயிர்த்திரளின் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், அழகமைப்பிற்கும், எண்ணிக்கைப் பெருக்கிற்கும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது.
ஸ்விஸ் நாட்டு அறிஞர் ஒருவர் நினைவூட்டுகிறபடி உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் ஐந்தடி உயரந்தானும் வளர்வது அரிது. துருவங்களண்டைப் பாசிகள் கூட மிக அருமையாகவே(அரிதாகவே) காணப்படுகின்றன. ஆனால் நம் தென் இந்தியா போன்ற நடுக்கோட்டுப் பகுதியிலோ நூறு, நூற்றிருபது அடி உயரமுள்ள மூங்கில் கூடப் புல் எனப்படுகிறது. "புறக்கா ழனவே புல்லென மொழிப" என்னும் தொல்காப்பிய உரை காண்க. மற்றும் ஆலமரம் நமக்கு ஒரு மரமே;குளிர்ந்த வடநாட்டினர் அஃது ஒரு காடு எனக் கணிப்பாராம்.
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment